Shop

தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்
தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்

தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்

தொல்மனித இனங்களைப் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. இச்சூழலில் தமிழ் உலகில் தொல்மனித இனங்கள், சேப்பியன்கள், அவற்றின் இடப்பெயர்வுகள் பற்றிய தகவல்கள் சென்றடைய வேண்டிய தேவை இருக்கின்றது. இதில்..
  • -ஆப்பிரிக்காவிலிருந்து இடப்பெயர்வுகள்
  • -நியாண்டர்தால், டெனிசோவன் வகை மனிதகுலம்
  • -நவீன மனிதர்கள்
  • -வெவ்வேறு மனித குலங்களுக்கிடையே இனக்கலப்பு
  • -விவசாயக் குட்டத்தின் இடப்பெயர்வு
  • -ஸ்டெப்பி புல்வெளி - யம்னயா
  • -இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்
  • -இந்திய மரபியல் ஆய்வுகள்
  • -இந்திய சமூக அமைப்பு
இன்னும் பல தலைப்புக்களில் ஆராயப்படும் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
அறிவியல் துறையின் மரபணுவியல் தகவல்கள் தான் மனிதர்கள் தங்களையும். தங்களின் மூதாதையர்களையும். மக்களின் இடப்பெயர்வுகளையும் அறிந்து கொள்ள வழி வகுக்கும்.
180.00
நாகர் நிலச்சுவடுகள்

நாகர் நிலச்சுவடுகள்

ஒரு வரலாற்றுப் பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக (பயணியின் நாட்குறிப்பாக) இலங்கையின் சில பகுதிகளை பருந்துப்பார்வையாக காட்சிப் படுத்துகிறது இந்த கட்டுரைத்தொகுப்பு. பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொன்மை வரலாற்றில் மறைந்து கிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து, அறியத் தரும் எளியதொரு முயற்சியே இந்நூல்.
100.00
பாதை அமைத்தவர்கள்

பாதை அமைத்தவர்கள்

வெளிநாடுகளில் இருப்பதைப்போல் பெண்களுக்கான அரங்கு (Hall of Fame) உள்ள பெண்கள் அருங்காட்சியகம் ஒன்று உருவானால் நிவேதிதா நூல்களில் உள்ள அனைத்துப் பெண்களும் அதில் இருப்பார்கள். பல முயற்சிகள் எடுத்து, பலர் உதவியுடன் விடாமல் தரவுகளைத் தேடி, பலர் பார்வைக்குப் பொதுவெளிக்கு இவர் கொண்டுவந்திருக்கும் பல பெண்கள் இந்த நூலில் உண்டு. திரைப்படம், பல துறை மருத்துவம், இசைக் கலை, நாட்டியம், எழுத்து, திரைப்பாடல், கல்வி, விமானப் படை பணி, உளவுத் தொழில், பட்டயக் கணக்கு, செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கு, செவிலியர் பணி என்று பல துறைகளில் செயல்பட்ட பெண்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் உயிர்ப்புள்ள மொழியில் கூறுகிறார். நாம் அறிந்த எழுத்தாளரான திலகவதியுடன் நிவேதிதா செய்த மிக நீண்ட நேர்காணல் அவரைப் பற்றிய பல புதுத் தகவல்களைத் தருகிறது. அவரை மனம் திறந்து பேச வைக்கிறார் நிவேதிதா. அவரும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார். மிகவும் மனத்தை நெகிழ்த்தும் நேர்காணல் இது – அம்பை
300.00