Cart

No products in the cart.

Uncategorized

கீழடி வைகை நாகரீகம்

கீழடி வைகை நாகரீகம்

தமிழக வரலாறு, வரலாற்றுப்‌ பாதுகாப்பு, ஐரோப்பியத்‌ தமிழியல்‌,”தமிழ்ப்‌ பண்பாட்டு தேடல்கள்‌, தமிழ்‌ மக்கள்‌ புலம்பெயர்வு தொடர்பான ஆய்வு எனப்‌ பன்முகத்‌ தேடல்களுடன்‌ இயங்கி வரும்‌ முனைவர்‌.க.சுபாஷிணியின்‌ தொல்லியல்‌ அகழாய்வு குறித்த குழந்தைகளுக்கான நூல்‌ இது. ‘உலக நாகரிகங்களின்‌ வரிசை’ என்ற பொருளில்‌ இந்த நூல்‌ அடங்குகின்றது. தமிழின்‌ தொன்மைக்குப்‌ பெருமை சேர்க்கும்‌ கீழடி அகழாய்வுச்‌ செய்திகளை எளிய முறையில்‌ இளம்‌ சிறார்கள்‌ அறிந்து கொள்ளும்‌ வகையில்‌ இந்த நூல்‌ படைக்கப்பட்டூள்ளது. முனைவர்‌.க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழ்‌ மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்‌ தலைவராகவும்‌ ‘கடிகை’ தமிழ்‌ மரபு முதன்மைநிலை இணையக்‌ கல்விக்‌ கழகத்தின்‌ இயக்குநராகவும்‌ செயல்படூகின்றார்‌. ஒரு பன்னாட்டு கணினி வர்த்தக நிறுவனத்தின்‌ ஐரோப்பியப்‌ பகுதி கணினி பொறியியல்‌ நிர்வாகப்‌ பிரிவின்‌ பொறுப்பாளராக பணிபுரியும்‌ இவர்‌ உலகளாவிய வகையில்‌ அருங்காட்சியகங்கள்‌, வரலாறு, தொல்லியல்‌ அகழாய்வு ஆகிய துறைகளிலும்‌ தொடர்ந்து செயல்பட்டு வருபவர்‌. தொல்லியல்‌ அகழாய்வு பற்றிய செய்திகளும்‌ தக்க தரவுகளுடன்‌ கூடிய தமிழர்‌ வரலாறும்‌ குழந்தைகளுக்கும்‌ சென்று சேரவேண்டும்‌ என்ற நோக்கத்துடன்‌ இந்த நூல்‌ வெளிவருகின்றது
199.00
தமிழர் புலப்பெயர்வு
தமிழர் புலப்பெயர்வு
Hot

தமிழர் புலப்பெயர்வு

உலகளாவிய தமிழரின் பயணங்களும், குடியேற்றங்களும் பற்றிய வரலாறு. தமிழர் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ் நிலத்திலிருந்து புலம் பெயர்ந்திருக்கின்றனர். உலகத் தமிழரின் தொடர்ந்த பயணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா..?
  1. பண்டைய கிரேக்க ரோமானியரோடு வணிகம்
  2. பௌத்த சமய பரவலாக்கப் பின்னனி
  3. பல்லவர், சோழர், பாண்டியர் கால பயணங்கள்
  4. பொ.ஆ 14ஆம் நூற்றாண்டு கால பயணம் குறிப்பாக மரைக்காயர், லப்பை, சோளிய இஸ்லாமிய வணிகர்கள், தமிழ் வணிகர்களின் பயணங்களினால் ஏற்பட்ட புலம்பெயர்வு
  5. அச்சு இயந்திரம் - அச்சுப்பதிப்பாக்கம் உருவாக்கிய புலப்பெயர்வுகளுக்கான தேவைகள்
  6. அடிமை வணிகம் - இதன் வழி ஏற்பட்ட பேரளவிலான தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
  7. ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
  8. யாழ்ப்பாணத் தமிழரின் ஆங்கிலேயர் காலனித்துவ கால புலப்பெயர்வுகள், இலங்கை போர் காலத்தில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள்..
  9. 20ஆம் நூற்றாண்டில் - பர்மா மக்கள் நாடு திரும்புதல், மத்திய கிழக்காசியா, ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் இந்திய நாடுகடந்த அரசு
  10. உலகத் தமிழாய்வுகளில் தனிநாயகம் அடிகளின் பங்களிப்புகள், அண்மைய புலம்பெயர்வுகள், இன்றைய நிலை
என 10 அத்தியாயங்களில் தமிழரின் 2500 ஆண்டுகால புலப்பெயர்வுகளை விவரிக்கின்றது இந்த நூல்.
500.00